நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

 

நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில், திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து இடங்களிலும் பேசும்போது, நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தமிழக மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தது. நான் நடந்து முடிந்த சட்டப்பேரவையில்,நேரடியாக,இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா?இல்லையா? நீட் இருப்பின் மாணவர்கள் தயாராக வேண்டுமா?வேண்டாமா? என கேட்டதற்கு முதல்வர் இதற்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை. மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலினை கேட்டுக்கொண்டிருக்கிறார் .

நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

இதுகுறித்த அவரது அறிக்கையில், ‘’நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தலைமை தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து இடங்களிலும் பேசும் போது நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தமிழக மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தது. தமிழகத்தை பொறுத்த வரை அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவை நிறைவேற்ற நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அனைவரது நிலைப்பாடு.

காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி ஆட்சியின்போது 2010ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத்தேர்வு தமிழ்நாட்டு மாணவர்களைப் பொருத்தவரை பாதிப்பை ஏற்படுத்தும் அதைத் இருக்கக்கூடாது என்பதுதான் அம்மா அரசின் நிலைப்பாடு. இதற்காக அரசு உதவி பெறும் வரை சென்று போராடி யது. விலக்கும் பெற்றது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

நீட் தேர்வை அம்மாவின் அரசு கடுமையாக எதிர்த்த போதும் அதிகரிக்கும் வரை தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரை தேர்வுக்கு தயார் படுத்தும் பணியையும் அதற்கு ஏற்றார் போன்ற பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது மாவட்டம்தோறும் வீட்டு தேர்வுக்காக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

மேலும் நீட் தேர்வு குறித்த புரிதலுக்காக வல்லுநர்களைக் கொண்டு ஒரு சிறப்பு பெயரில் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தீவிர நடவடிக்கைகள் மட்டுமல்லாமல் அரசு பள்ளி மாணவர்கள் பெருமளவு மருத்துவம் சேர வேண்டும் என்பதற்காக அம்மா அரசால் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இதனால் சுமார் 435 மாணவ-மாணவியர் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். இவர்களது 5 ஆண்டுக்கான மருத்துவக் கல்வியை அம்மாவின் அரசு ஏற்றுக்கொண்டது.’’என்று குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

அவர் மேலும், ‘’ நடந்து முடிந்த சட்டமன்ற பேரவை கூட்டத்தில் நான் பேசும்போது ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தீர்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டதற்கு, நீதியரசர் ராஜன் தலைமையில் வீட்டின் பின் விளைவுகளை அறிவதற்கு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்றும் கமிசன் பரிந்துரைகளில் உயிர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பதிலளித்தார். அதை தொடர்ந்து நான் பேரவையில் நேரடியாக இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா இல்லையா என்ற கேள்வியை எழுப்பினேன்.

நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

நீட் இருப்பின் மாணவர்கள் இதற்கு தயாராக வேண்டுமா? வேண்டாமா? என கேட்டபொழுது முதலமைச்சர் இதற்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. தற்போதைய அரசின் இந்த முடிவால் நடப்பாண்டு நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறுகின்ற மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது . மாணவர்கள் தயாராக வேண்டாமா என்று புரியாமல் தவித்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி இந்த ஆண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்திய தீரும் என்று அகில இந்திய மருத்துவக் கல்விக் கழகம் அறிவித்துள்ளது .

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றோ தீருவேன் என்று வாக்குறுதி தந்த இந்த அரசு நியமித்துள்ள நீதியரசர் ராஜன் தலைமையிலான கமிஷன் பரிந்துரைகள் வருவதற்கு முன்பு தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதாக வேண்டாமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.