அஜித்குமார் எடுத்த அதே முடிவில் பிரபாஸ்…ரசிகர்கள் மகிழ்ச்சி

 

அஜித்குமார் எடுத்த அதே முடிவில் பிரபாஸ்…ரசிகர்கள் மகிழ்ச்சி

எத்தனை கோடி கொட்டிக்கொடுத்தாலும் விளம்பரப்படங்களில் நடிப்பதில்லை என்று ரஜினிகாந்த், அஜித்குமார் உள்ளிட்ட நடிகர்கள் உறுதியாக இருக்கிறார்.

அஜித்குமார் எடுத்த அதே முடிவில் பிரபாஸ்…ரசிகர்கள் மகிழ்ச்சி

இத்தனை கோடி ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் நாம் விளம்பரங்களால் அந்த ரசிர்கர்களை அதிருப்தி அடைய வைத்துவிடக்கூடாது என்றுதான் அந்த முடிவில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

இதில் அஜித்குமார் ஒரு படி மேலே சென்று, தான் சம்பந்தப்பட்ட ஆடியோ ரிலீஸ் உள்ளிட்ட பட புரமோஷன் நிகழ்வுகளுக்கும் வருவதில்லை. என் படம் அப்படி இப்படி என்று புரமொஷனில் வந்து அள்ளிவிடவேண்டும். அப்படி என் ரசிகர்களை நாம் ஏமாற்ற விரும்பவில்லை. படம் பார்க்க வேண்டும் நினைத்தால் அவர்களாகவே வரட்டும் என்று தனது பட சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதையே தவிர்த்துவிட்டார்.

பாகுபலி படத்திற்கு முன் விளம்பரப்படங்களில் நடித்து வந்துள்ளார் பிரபாஸ். அப்போது அவருக்கு 18 கோடி மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பாகுபலி படத்திற்குப் பின்னர் இந்திய அளவில் ரசிகர்கள் அதிகம் இருப்பதால், பிரபல மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க பிரபாசை கேட்டிருக்கிறார்கள். 150 கோடி ரூபாய் சம்பளம் தருவதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

அஜித்குமார் எடுத்த அதே முடிவில் பிரபாஸ்…ரசிகர்கள் மகிழ்ச்சி

இதற்கு முன்பு 18 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்தவர்கள் இப்போது 150 கொடுக்கிறார்களே என்று வாய்பிளந்து அவர் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை.

தனக்கு ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். இந்திய மொழிகளில் எல்லாம் படம் ரிலீஸ் ஆகிறது. ரசிகர்கள் அதிகம் சேர்ந்துவிட்டதால் அவர்களை அதிருப்தி ஆக்கும்படியான எந்த செயலும் செய்யக்கூடாது என்று முடிவெடுத்துதான் அந்த விளம்பரபட வாய்ப்பினை ஏற்க மறுத்துள்ளார்.

இந்த விசயமறிந்த பிரபாஸ் ரசிகர்ககள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.