பெற்றோர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் தொற்றுக்கு ஆளாகும் குழந்தைகள்

 

பெற்றோர்கள் தடுப்பூசி  போட்டுக் கொள்ளாததால் தொற்றுக்கு ஆளாகும்  குழந்தைகள்

ஒரு வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் கடந்த 20 நாட்களில் மட்டும்258 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதால் அதிர்ந்து போயிருக்கிறது காஞ்சிபுரம்.

பெற்றோர்கள் தடுப்பூசி  போட்டுக் கொள்ளாததால் தொற்றுக்கு ஆளாகும்  குழந்தைகள்

கொரோனா முதல் அலையில் 50 வயதுக்கும் மேல் உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். இரண்டாம் அலையில் 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகம் பாதிப்பு இருந்து வந்தது. ஆனால் தற்போது ஒரு வயது குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று அதிகம் உறுதியாகி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 29ம் தேதி முதல் 19ம் தேதி வரைக்கும் ஒரு வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 258 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை சொல்கிறது. ஒரு வயது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட 48 குழந்தைகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பெற்றோர்களின் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 300 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் 13 முதல் 15 பாதிக்கப்படுகிறார்கள் என்றும், பெற்றோர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே குழந்தைகள் பாதிக்கப்படாமல் தடுக்கலாம் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.