இந்த ஆட்சியானது தாய்ப்பறவை போல செயல்படுகிறது…பாரதிராஜா மகிழ்ச்சி

 

இந்த ஆட்சியானது தாய்ப்பறவை போல செயல்படுகிறது…பாரதிராஜா மகிழ்ச்சி

மு. க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் சென்று முதல்வருக்கு நேரில் வாழ்த்து சொன்னார் இயக்குனர் பாரதிராஜா. இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வில் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சியானது தாய்ப்பறவை போல செயல்படுகிறது…பாரதிராஜா மகிழ்ச்சி

அதில், மக்கள் தேவைகள் அறிந்து செயலாற்றுவதே சிறந்த அரசின் பணியாகும். அந்த வகையில் இந்த ஆட்சியானது தாய்ப்பறவை போல செயல்பட தொடங்கி இருப்பதை அறிந்து மகிழ்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், நம் மண்ணின் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட சலுகைகள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் முனைப்பு எடுத்துவரும் இந்த அரசின் செயல்பாடுகளை மிகவும் ரசிக்கிறோம் . சீரிய வேகத்தில் செயலாற்றும் முதல்வருக்கும் அரசு இயந்திரத்திற்கு என் நன்றிகள்.

இந்த ஆட்சியானது தாய்ப்பறவை போல செயல்படுகிறது…பாரதிராஜா மகிழ்ச்சி

கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா காலகட்டத்திலிருந்து மக்கள் இயல்பை நோக்கி திரும்ப கவனமாக கட்டுப்பாடுகளை தளர்த்தி வரும் வேளையில், திரைத்துறையும் மீள தளர்வுகள் அறிவித்தமைக்கு மிக்க நன்றிகள்.

முடங்கிக்கிடந்த திரையரங்குகள் இல்லாமல் தவிக்கும் எம் படங்கள் ஒரு புறம், பாதி படப்பிடிப்பு முடித்து மீதி படத்தை முடிப்பதற்காக காத்திருக்கும் படங்கள் ஒருபுறம் என்று கடந்த பத்து மாதம் சுமக்க வேண்டிய குழந்தை இரண்டு வருடங்கள் சுமந்தது போன்ற வலி மறுபுறம் என்று இருந்த நிலைமைக்கு உங்கள் அறிவிப்பு பெரும் வளர்ச்சியை தந்திருக்கிறது என்கிறார்.

படப்பிடிப்பை நடத்திக் கொள்ள நீங்கள் அனுமதி தந்துள்ளது எங்களுக்கு மீண்டும் உயிர் பெற்றது போல இருக்கிறது. இயல்பு நிலை திரும்பும் தருணத்தில் திரையரங்குகளையும் திறக்க தங்களுக்கு உதவுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக அனைத்து நல்லவைக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகுறிப்பிட்டிருக்கிறார்.