காரில் மும்பை வரை அந்த பெண்ணுடன்..கனிமொழி உருக்கம்
Jun 18, 2021, 11:29 IST1623995987000
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளரும், ஒழலூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான O.E.ஈஸ்வரி மறைவுச் செய்தி அறிந்து வருந்தினேன். ஓய்வறியாது கழகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இறுதி வரை உழைத்தவர் என்று இரங்கல் தெரிவித்துள்ளார் கனிமொழி எம்.பி.
அவர் மேலும் ஈஸ்வரி குறித்து, சென்ற ஆண்டு கொரோனா தொற்று முழு முடக்கக் காலத்தில், முன்பின் தெரியாத ஒரு பெண், சென்னையில் இருந்து தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக மும்பை செல்லவேண்டி இருந்தது. பொதுப்போக்குவரத்து ஏதும் இல்லாத போது, தனது மகளை காரில் மும்பை வரை அந்த பெண்ணுடன் அனுப்பிய அவரது மனித நேயம் என்னை வியக்கச் செய்தது. அவரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவு செய்திருக்கிறார்.