மத்திய அரசின் எதிர்ப்பை மீறி வாட்ஸ் ஆப் காலில் பேச நளினி, முருகனுக்கு அனுமதி

 

மத்திய அரசின் எதிர்ப்பை மீறி வாட்ஸ் ஆப் காலில் பேச நளினி, முருகனுக்கு அனுமதி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகனும் அவரது மனைவி நளினியும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். பேரறிவாளன் உள்ளிட்ட இவர்களையும் சேர்த்து எழுவரின் விடுதலைக்காக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

மத்திய அரசின் எதிர்ப்பை மீறி வாட்ஸ் ஆப் காலில் பேச நளினி, முருகனுக்கு அனுமதி

சிறையில் உள்ள முருகனும், நளினியும் மாதம் ஒருமுறை சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உறவினர்களுடன் வாட்ஸ் ஆப் காலில் பேச அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டிருந்தது.

நளினியும், முருகனும் லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் ஆப்காலில் பேச அனுமதி அளிக்குமாறு நளினியின் தாய் பத்மா இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.

மத்திய அரசின் எதிர்ப்பை மீறி வாட்ஸ் ஆப் காலில் பேச நளினி, முருகனுக்கு அனுமதி

நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கின் விசாரணையில், வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் பேச இருவருக்கும் அனுமதி அளித்தால், ராஜீவ்காந்தி கொலை வழக்கின் விசாரணை பாதிக்கும் என்று மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

சிறைத்துறை சார்பில் எடுத்துவைக்கப்பட்ட வாதத்தில், 2011 அரசாணையின்படி சிறைக்கைதிகள் வெளிநாட்டில் இருப்போருடன் பேச அனுமதி இல்லை. அதே நேரம், இந்தியாவிற்குள் இருக்கும் உறவினர்களுடன்10 நாளைக்கு ஒரு முறை, ஒரு மாதத்திற்கு 30 நிமிடங்கள் 3 அழைப்புகள் பேச அனுமதிக்கப்படுகிறது. அதுவும் கூட சிறைவாசிகளின் அடிப்படை உரிமை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் எதிர்ப்பை மீறி வாட்ஸ் ஆப் காலில் பேச நளினி, முருகனுக்கு அனுமதி

மத்திய அரசு மற்றும் சிறைத்துறையின் வாதங்களை கேட்ட பின்னர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர் நீதிபதிகள்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ளனர். நளினியும், முருகனும் வெளிநாடுகளில் இருக்கும் உறவினர்களுடன் வாட்ஸ் ஆப் காலில் பேச அனுமதி அளித்தனர்.