என் முதுகில் குத்தி குத்தி முதுகில் குத்த இடமே இல்லை;அந்த அளவுக்கு செய்து விட்டார்கள்.. சசிகலா

 

என் முதுகில் குத்தி குத்தி முதுகில் குத்த இடமே இல்லை;அந்த அளவுக்கு செய்து விட்டார்கள்.. சசிகலா

சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சசிகலா மேலும் சில அதிமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றைய தினம் மட்டும் பலருடன் பேசி இருக்கிறார். அந்த ஆடியோக்களும் நேற்றைய தினமே வெளியாகி இருக்கின்றன.

என் முதுகில் குத்தி குத்தி முதுகில் குத்த இடமே இல்லை;அந்த அளவுக்கு செய்து விட்டார்கள்.. சசிகலா

தேனியை சேர்ந்த அந்த அதிமுக தொண்டர் சிவனேசன் சசிகலாவிடம் பேசியபோது, ’’ஓ பன்னீர் செல்வத்தை இணைத்துக்கொண்டு கட்சியை நடத்த வேண்டும்’’ என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். அதற்கு பதிலளித்த சசிகலா, ‘’ அந்த சமயத்தில் ஓபிஎஸ் போய்விட்டார்; இல்லையென்றால் அவரைத்தான் உட்கார வைத்து இருப்பேன்’’என்கிறார்.

’’அனைவரும் ஒன்று சேர்த்தால் தான் கட்சியை வழிநடத்த முடியும். அதுவே இங்கு இல்லை என்றால் எப்படி? இதை நினைத்துதான் தொண்டர்கள் என்னிடம் கவலைப்படுகின்றனர். அவர்களுக்கு நான் தாயாக இருந்து என்ன சொல்ல முடியும்? நான் அவர்களைக் கட்டுப்படுத்தி வருகிறேன். தொண்டர்கள் யார் போன் செய்தாலும் என்னிடம் வருத்தப்படுகின்றனர்.

என் முதுகில் குத்தி குத்தி முதுகில் குத்த இடமே இல்லை;அந்த அளவுக்கு செய்து விட்டார்கள்.. சசிகலா

ரொம்ப ஜாதி ரீதியாக போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து பல பகுதிகளிலிருந்தும் பேசுகிறவர்கள் வருத்தப்படுகின்றனர். குறிப்பாக ஈரோடு, சூலூரிலிலிருந்து பேசியவர்கள் கூட இதையே சொல்லி வருத்தப்பட்டார்கள். இது பொதுவான கட்சி. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் பொதுவான கட்சியாக இருந்தாலும் இன்று இந்த அளவுக்கு கொண்டு போய் விட்டார்கள் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் என்னவாகும் என்பது தான் எல்லோருக்கும் கவலையாக இருக்கிறது.

தொண்டர்கள் இப்படி மனக்குமுறலோடு இருக்கும்போது அதை நான் எப்படிப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும். அதனால்தான் சந்திக்க வருகிறேன் என்று தெரிவித்தேன். அதற்காக அவர்களை கட்சியிலிருந்து நீக்கியதால், எல்லோரும் இது குறித்தே பேசுகின்றனர்.

என் முதுகில் குத்தி குத்தி முதுகில் குத்த இடமே இல்லை;அந்த அளவுக்கு செய்து விட்டார்கள்.. சசிகலா

ஒரு சிலரின் சுயநலத்திற்காக தொண்டர்களை பலிகடா ஆக்குவதா? இதுதான் கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு கிடைத்த பரிசா? என் முதுகில் குத்தி குத்தி முதுகில் குத்த இடமே இல்லை. அந்த அளவுக்கு செய்து விட்டார்கள். இப்போது தொண்டர்களையும் செய்யும்போது எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்? ‘’என்று ஆவேசமாகிறார்.

என் முதுகில் குத்தி குத்தி முதுகில் குத்த இடமே இல்லை;அந்த அளவுக்கு செய்து விட்டார்கள்.. சசிகலா

‘’ கஷ்டப்பட்ட காலத்தில் கட்சியை நிமிர்த்திக் கொண்டு வர ஜெயலலிதா எவ்வளவு பாடுபட்டார் என்று எல்லோருக்கும் தெரியும். அவருடன் நானும் எவ்வளவு பாடு பட்டேன் என்பதும் எல்லோருக்கும் தெரியும். இப்போது எப்படி என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும்? என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தொண்டர்கள் நினைப்பதை நிச்சயம் செய்து காட்டினேன். எனக்கு என்று எதுவும் இல்லை. தொண்டர்கள் தான் எனக்கு முக்கியம். அந்த தொண்டர்களோடு கடைசி வரைக்கும் இருந்து விட்டு போகிறேன்.

என் முதுகில் குத்தி குத்தி முதுகில் குத்த இடமே இல்லை;அந்த அளவுக்கு செய்து விட்டார்கள்.. சசிகலா

தொண்டர்கள் தற்போது பேசிவருவதை கேட்டு மிகுந்த வருத்தத்தில் இருக்கிறேன். அவர்கள் என்னை சேர்த்துக்கொள்ள முடியாது விரைவில் நாங்களே வந்து காட்டுவோம் என்றனர். அதனால் நானும் சரி என்று ஒதுங்கி இருந்தேன். ஆனால் இப்போது கட்சியை காப்பாற்ற நான் உறுதியாக வருவேன். எனக்கு அடிமட்ட தொண்டர்கள் தான் முக்கியம் . அதற்கான நேரம் வந்துவிட்டது. நிச்சயம் நல்லது நடக்கும் கவலைப்பட வேண்டாம்’’என்கிறார் அதிரடியாக.