திமுகவினரும் இதே போல் கைது செய்யப்படுவார்களா? எச்.ராஜா

 

திமுகவினரும் இதே போல் கைது செய்யப்படுவார்களா? எச்.ராஜா

மறைந்த முன்னாள் முதல்வர்கள் சி.என். அன்னாதுரை, எம்.கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டதால் சமூக ஊடகவியலாளர் கிஷோர் கே. சுவாமி, சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுகவினரும் இதே போல் கைது செய்யப்படுவார்களா? எச்.ராஜா

காஞ்சிபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி அளித்த புகாரில், ஐபிசி 153, 505 (1/B), 505 (1-C) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிஷோர் கே சாமியை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசிவரும் திமுகவினரும் இதே போல் கைது செய்யப்படுவார்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.