விளையாடப்போன சிறுவன் தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு

 

விளையாடப்போன சிறுவன் தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு

சென்னை குரோம்பேட்டை அம்பேத்கர் நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்த வெங்கடேஷ் – சரஸ்வதி தம்பதிக்கு 6 வயதில் கயல்விழி என்ற மகளும், 4வயதில் சர்வேஸ் என்ற மகனும் இருந்தனர்.

விளையாடப்போன சிறுவன் தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு

நேற்று காலையில் சர்வேஷ் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தான். கொஞ்சம் நேரம் கழித்து மகனின் சத்தம் வராததால், வாசல் பக்கம் வந்து பார்த்தார் சரஸ்வதி. மகனை காணவில்லை என்றதும் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தார்.

வேலை காரணமாக வெளியே சென்றிருந்த சலவைத் தொழிலாளியான வெங்கடேஷ் அதற்குள் வந்துவிட்டதால், அவரும் நாலாபுறமும் தேடினார்.

வீட்டின் பின்புறம் இருந்த தரைமட்ட தண்ணீர் தொட்டியின் மேல் மூடப்பட்டிருந்த பலை கொஞ்சம் விலகி இருந்ததால் சந்தேகமடைந்து பலகையை எடுத்துவிட்டு பார்த்தனர். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் மகன் சர்வேஷ் மூழ்கி கிடந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர்.

கதறியபடியே மகனை தூக்கிக்கொண்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அச்சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

குரோம்பேட்டை போலீசார் இதுகுறித்து விசாரணை செய்ததில், வீட்டின் முன்புறம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், பின்புறம் சென்று எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து மூழ்கியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.