திருவள்ளூரில் ஒரே நாளில் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு!

 

திருவள்ளூரில் ஒரே நாளில் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தவிர்த்து செங்கல்பட்டு, மதுரை, தேனி, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக பொதுமுடக்கம் அமல்படுத்துவதற்கு முன்னர், உயிர் பிழைத்துக் கொள்ள சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு வெளியேறியவர்கள் மூலமாக அதிக அளவில் கொரோனா பரவியது.

திருவள்ளூரில் ஒரே நாளில் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பூந்தமல்லி, ஆவடி, சோழவரம், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் 271 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் திருவள்ளூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,476 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், தற்போது பிற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாகி வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.