கடையை திறப்பதற்கு முன் சாமி கும்பிட போனவருக்கு நேர்ந்த கதி

 

கடையை திறப்பதற்கு முன் சாமி கும்பிட போனவருக்கு நேர்ந்த கதி

காலையில் கடையை திறப்பதற்கு முன்பாக கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டபோது கோவிலின் கான்கிரீட் பலகை விழுந்து உயிரிழந்த சம்பவம் வேளச்சேரி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடையை திறப்பதற்கு முன் சாமி கும்பிட போனவருக்கு நேர்ந்த கதி

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் திவாகரன். இவர் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். காலையில் கடையை திறக்க வந்த திவாகரன், அதே தெருவில் இருந்த விநாயகர் கோவிலுக்கு சாமிகும்பிட்டு வர சென்றார். 100 ஆண்டுகள் பழமையான ஆலயம் அது.

கோவிலுக்கு எதிரே நின்றுதான் திவாகரன் விநாயகரை வழிபட்டுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக கோவிலின் முன்புறம் இருக்கும் கான்கிரீட் பலை சரிந்து விழுந்தது. இந்த பலகை திவாகரன் மேல் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடையை திறப்பதற்கு முன் சாமி கும்பிட போனவருக்கு நேர்ந்த கதி

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திவாகரன் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பக்தருக்கு நேர்ந்த இந்த கதியை நினைத்து அப்பகுதியில் உள்ள விநாயகர் கோயில் பக்தர்கள் அனைவரும் அதிர்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.