2,700 கோடி மதிப்பிலான ஹெராயின் பாகிஸ்தான் பார்டர் பக்கமாக பறிமுதல்!

 

2,700 கோடி மதிப்பிலான ஹெராயின் பாகிஸ்தான் பார்டர் பக்கமாக பறிமுதல்!

உணவுப் பொருட்கள் ஏற்றிவந்த லாரியில் மறைவாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 532 கிலோ எடையுள்ள ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இன்றைய தேதிக்கு இதன் மதிப்பு 2,700 கோடி ரூபாயாகும். இந்திய சுங்கத்துறை சோதனை வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள் பிடிபட்டது இதுவே முதன்முறை.

‘இங்கிலாந்து – இந்தியா கிரிக்கெட் போட்டியின்போது, இந்தியாவுக்குத்தான் எங்கள் சப்போர்ட், இங்கிலாந்துகாரன் நம்ம ரெண்டு பேரையும் 200 வருஷமா சுரண்டுனவன், என்ன இருந்தாலும், இந்தியா எங்கள் அங்காளி பங்காளி, நீ வா பங்கு’ என பாகிஸ்தான்காரர்கள் பம்மும்போதே, நமது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ஏதோ புரிந்துவிட்டது. தக்காளி, ஏதோ பெருசா ப்ளான் பண்றானுக என உஷாரான அதிகாரிகள், இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி செக்போஸ்டில் வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எதிர்பார்த்ததுபோலவே, மிகப்பெரிய திமிங்கிலம் சிக்கியிருக்கிறது.

Heroin captured

உணவுப் பொருட்கள் ஏற்றிவந்த லாரியில் மறைவாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 532 கிலோ எடையுள்ள ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இன்றைய தேதிக்கு இதன் மதிப்பு 2,700 கோடி ரூபாயாகும். இந்திய சுங்கத்துறை சோதனை வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள் பிடிபட்டது இதுவே முதன்முறை.