நெல்லை அருகே தடுப்பணையில் மூழ்கி இளைஞர் பலி!

 

நெல்லை அருகே தடுப்பணையில் மூழ்கி இளைஞர் பலி!

நெல்லை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றின் தடுப்பணையில் குளித்த இளைஞர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் முத்துகுமார். இவரது மகன் ராம்குமார் (27). இவர், நேற்று நண்பர்களுடன் அம்பாசமுத்திரம் அடுத்த சின்ன சங்கரன்கோவில் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் தடுப்பணையில் குளிக்க சென்றார். ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, ராம்குமார் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால், நீரில் மூழ்கினார்.

நெல்லை அருகே தடுப்பணையில் மூழ்கி இளைஞர் பலி!

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தடுப்பணையில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர தேடலுக்கு பின்பு அவர்கள் ராம்குமாரை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர்.

தகவல் அறிந்த அம்பாசமுத்திரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்த வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.