செல்போனுக்காக போன உயிர் -ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

 

செல்போனுக்காக போன உயிர் -ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்


ஆட்டோவில் போன பெண்ணிடமிருந்து செல்போனை பறித்தவர்களை ,பிடிக்க அந்த பெண் குதித்ததால் அவர் உயிர் போனது .

செல்போனுக்காக போன உயிர் -ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்


மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் வசிக்கும் 27 வயதான கன்மில்லா ரைசிங் என்ற இளம் பெண் கடந்த புதன் கிழமையன்று ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அவர் ஆட்டோவின் ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு போன் பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்தார் .அப்போது அவரின் கையிலிருப்பது விலையுயர்ந்த செல்போன் என்பதை கண்டு கொண்ட அந்த வழியே வந்த அல்கேஷ் பர்வேஸ் மோமின் அன்சாரி (20) மற்றும் சோஹைல் ரம்ஜான் அன்சாரி (18)ஆகியோர் அவரை ஒரு பைக்கில் பின் தொடந்து வந்தனர் .
பின்னர் அவரின் ஆட்டோ ஒரு இடத்தில் நின்றதும், இருவரும் அவர் கையிலிருந்த செல்போனை பறித்துக்கொண்டு பைக்கில் பறந்தார்கள் .அதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அநத ஆட்டோவிலிருந்து குதித்து அவர்களை துரத்திக்கொண்டு ஓடினார் .அப்போது அவர் ஆட்டோவிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார் .அதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .பின்னர் அந்த இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாலையில் விழுந்தார் .அப்போது அந்த பகுதி மக்கள் அவரை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணிடமிருந்து செல்போனை பறித்த அந்த இரு வாலிபர்களையும் சிசிடிவி கேமெரா மூலம் கண்டறிந்து கைது செய்தனர் .