சென்னையில் ஒரே நாளில் 27 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

 

சென்னையில் ஒரே நாளில் 27 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,807 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,714 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 84,598 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,403 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது.

சென்னையில் ஒரே நாளில் 27 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

இந்த நிலையில் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 7 பேரும் ஓமந்தூரார் மருத்துவமனையில் 5 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும் கேஎம்சி மருத்துவமனையில் 5 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.