மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
Jun 9, 2021, 18:25 IST1623243331000
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்வர் பொறுப்புக்கு வந்த பிறகு பல உயரதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 100ற்கும் மேற்பட்ட ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 25 ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 5 மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுரை, நெல்லை, திருப்பூர், சேலம் , கோவை மாநகராட்சி ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”
- தமிழ்நாடு தொழில் வளர்ச்சித் துறைக் கழக நிர்வாக இயக்குநர் கே.பி.கார்த்திகேயன் மாற்றப்பட்டு, மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பொதுத்துறை துணைச் செயலர் கிறிஸ்துராஜ் மாற்றப்பட்டு, சேலம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் நிர்வாக அலுவலர் கிராந்திகுமார் படி மாற்றப்பட்டு, திருப்பூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாக அலுவலர் விஷ்ணு சந்திரன் மாற்றப்பட்டு, நெல்லை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை மாநகராட்சி தெற்கு வட்டாரத் துணை ஆணையர் ராஜகோபால் சுங்கரா மாற்றப்பட்டு, கோவை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மாவட்ட வளர்ச்சி மைய திட்ட அலுவலர் நாகப்பட்டினம் எம்.எஸ்.பிரசாந்த் மாற்றப்பட்டு, சென்னை மாநகராட்சி (பணிகள்) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை வணிகவரித்துறை (அமலாக்கம்) இணை ஆணையர் நார்னாவாரே மணிஷ் சங்கர்ராவ் மாற்றப்பட்டு, சென்னை மாநகராட்சி (சுகாதாரம்) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பெரியகுளம் உதவி ஆட்சியர் சினேகா மாற்றப்பட்டு, சென்னை மாநகராட்சி (கல்வி) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தாராபுரம் சப் கலெக்டராகப் பதவி வகிக்கும் பவன் குமார் கிரியப்பனாவர் மாற்றப்பட்டு, கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மைய திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஈரோடு மாவட்ட வணிகவரித்துறை இணை ஆணையர் (மாநில வரிகள்) சரவணன் மாற்றப்பட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- குன்னூர் உதவி ஆட்சியர் ரஞ்சித் சிங் மாற்றப்பட்டு, கடலூர் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட உதவி ஆட்சியர் ஸ்ரீகாந்த் மாற்றப்பட்டு, தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மைய திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பொள்ளாச்சி மாவட்ட உதவி ஆட்சியர் வைத்தியநாதன் மாற்றப்பட்டு, தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மைய திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தருமபுரி மாவட்ட உதவி ஆட்சியர் பிரதாப் மாற்றப்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மைய திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சிவகாசி மாவட்ட உதவி ஆட்சியர் தினேஷ்குமார் மாற்றப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மைய திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மேட்டூர் உதவி ஆட்சியர் வி.சரவணன் மாற்றப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மைய திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திண்டிவனம் உதவி ஆட்சியர் எஸ்.அனு மாற்றப்பட்டு, பொதுப்பணித் துறை துணைச் செயலாளராக (புரோட்டோகால்) நியமிக்கப்பட்டுள்ளார்.
- குளித்தலை உதவி ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மாற்றப்பட்டு, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மைய திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சேரன்மாதேவி உதவி ஆட்சியர் பிரதீக் தயாள் மாற்றப்பட்டு, ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மைய திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- விருத்தாச்சலம் உதவி ஆட்சியர் பிரவீன்குமார் மாற்றப்பட்டு, ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மைய திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ராமநாதபுரம் மாவட்ட உதவி ஆட்சியர் சுகபுத்ரா மாற்றப்பட்டு, தஞ்சாவூர் மாவட்ட (வருவாய்த்துறை) கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தூத்துக்குடி உதவி ஆட்சியர் சிம்ரஞ்ஜீத் சிங் கஹ்லான் மாற்றப்பட்டு, சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ராணிப்பேட்டை உதவி ஆட்சியர் இளம்பகவத் மாற்றப்பட்டு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய இணை மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருப்பத்தூர் உதவி ஆட்சியர் வந்தனா கார்க் மாற்றப்பட்டு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பெரம்பலூர் உதவி ஆட்சியர் பத்மஜா மாற்றப்பட்டு, சேலம் சகோசெர்வ் நிறுவன மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.