ஓரிரு வாரங்களில் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும்..அமைச்சர் மா.சு. உறுதி

 

ஓரிரு வாரங்களில் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும்..அமைச்சர் மா.சு. உறுதி

தமிழகத்தில் முதன்முதலாக யுனானி முறையில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க சிறப்பு சிகிச்சை மையம் வாணியம்பாடியில் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

ஓரிரு வாரங்களில் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும்..அமைச்சர் மா.சு. உறுதி

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மற்றும் வாழ்வு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கதிர் ஆனந்த் எம்.பி. உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பு, சித்த மருத்துவ முறை மேலும் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டு இருக்கும் 400 படுக்கைகள் மற்றும் வாணியம்பாடியில் யுனானி முறையில் இதற்கு சிகிச்சை அளிக்க சிறப்பு சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.

ஓரிரு வாரங்களில் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும்..அமைச்சர் மா.சு. உறுதி

இதன் பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’கொரோனா தமிழகத்தில் வேகமாக குறைந்து வருகிறது. ஓரிரு வாரங்களில் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும் . பரிசோதனைகள் அதிமுக ஆட்சி காலத்தில் நாள் ஒன்றுக்கு 60 ஆயிரமாக இருந்தது. தற்போது நாள்தோறும் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 700 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் பரவலாக தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சியிருக்கும் மாவட்டங்களிலும் விரைவாக ஆய்வு நடத்தப்படும்’’என்று தெரிவித்தார்.

’’மாநிலம் முழுவதும் 52 சித்தா சிகிச்சை மையங்கள் கொரோனாவுக்காக தொடங்கப்பட்டிருக்கிறது. அதேபோல தமிழகத்திலேயே முதன்முறையாக வாணியம்பாடியில் யுனானி முறையில் சிகிச்சை அளிக்க புதிய சிகிச்சை மையம் தொடங்கப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.