நான் கம்பீரமாக வருகிறேன்; தலைநிமிர்ந்து வருகிறேன்..முதல்வர் ஸ்டாலின் பேச்சு

 

நான் கம்பீரமாக வருகிறேன்; தலைநிமிர்ந்து வருகிறேன்..முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் இன்று. இதை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்றூ மலர்தூவி மரியாதை செலுத்துகிறார் முதல்வர் மு.க .ஸ்டாலின். இதையடுத்து முன்னதாக வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.

நான் கம்பீரமாக வருகிறேன்; தலைநிமிர்ந்து வருகிறேன்..முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அந்த வீடியோவில், ‘’திருவாரூரில் கருவாகி தமிழகத்தையே தனது ஊராக மாற்றிய தலைவர்களுக்கு எல்லாம் தலைவர். முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே, இன்று நீங்கள் பிறந்த ஜூன்3 . இது உங்கள் பிறந்த நாள்மட்டுமல்ல. உயிரினும் மேலான உங்களின் கோடிக்கணக்கான உடன்பிறப்புக்கள் அனைவரும் புத்துணர்ச்சி பெற்ற நாள். அதனால்தன் கழகத்தின் கண்மணிகளாம், கருப்பு சிகப்பு தொண்டர்கள் அனைவருக்கும் தனித்தனி பிறந்தநாள் இல்லை. எல்லோருக்கும் பிறந்த நாள் இந்த ஜூன்3.

நான் கம்பீரமாக வருகிறேன்; தலைநிமிர்ந்து வருகிறேன்..முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வங்கக்கடலில் பேரறிஞருக்கு பக்கத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் எங்கள் பாசமிகு தலைவரே, இந்த ஜூன் 3ல் நான் கம்பீரமாக வருகிறேன். உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்து வருகிறேன்.’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் மேலும், ‘’ஈரோட்டில் அன்றொருநாள் நான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியில் உடன்பிறப்புகள் துணையோடு நிறைவேற்றி காட்டிவிட்டேன் என்பதை நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வருகிறேன்.

தலைவருக்கு கொடுத்த வாக்குறுதியை ஒரு தொண்டர் நிறைவேற்றி காட்ட வேண்டும் என்பதற்காகவே உரைக்கிறேன். நீங்கள் மறையவில்லை. மறைந்திருந்து என்னை கவனிப்பதாகத்தான் எப்போதும் நினைப்பேன். இப்போதும் கவனித்துக்கொண்டுதான் இருப்பீர்கள்.

கோட்டையை கைப்பற்றிய அடுத்தநாளே கொரோனாவை விரட்டபோராடிக் கொண்டிருக்கிறோம். உழைப்பு..உழைப்பு..உழைப்பு… என்று என்னை நீங்கள் உருவகப்படுத்தினீர்கள். அதற்கு உண்மையாக இருக்கவே உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

நான் கம்பீரமாக வருகிறேன்; தலைநிமிர்ந்து வருகிறேன்..முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அன்றொரு நாள் விழுப்புரத்தில் சொன்னீர்கள்..யாரிடமிருந்து பாராட்டு வரவில்லையோ, அவர்கள் பாராட்டும் வகையில் நடந்துகொள் என்று. உண்மையில் தலைவரே, தேர்தலில் நமக்கு வாக்களிக்க தவறியவர்கள், பலரது பாராட்டையும் இபோது கழகத்திற்கு வாங்கித்தரும் வகையில், செயல்பட்டு வருகிறேன்.

செயல்படுகிறேன் என்றால் தனிப்பட்ட நான் அல்ல, என்னுள் இருந்து நீங்கள்தான் செயல்பட வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் சொல் எனக்கு சாசனம். உங்கள் வாழ்க்கை எனக்கு பாடம். உங்கள் பாராட்டே எனக்கு உயிரிசை. உங்கள் குரலே எனக்கு தேனிசை.

இந்த ஜூன் 3ல் உங்களை வெற்றிச்செய்தியோடு வருகிறேன். வாழ்த்துக்கள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே? ’’ என்று உருக்கமுடன் கேட்கிறார்.