மனைவி, மகனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது?பார்த்திபன் வேதனை

 

மனைவி, மகனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது?பார்த்திபன் வேதனை

எனது 36வருட நண்பன் அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் கொரோனவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். அவர் மீண்டு வர அனைவரும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கடந்த மே17ம் தேதி அன்று தனது டுவிட்டரில் பதிவி செய்திருந்தார் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா.

மனைவி, மகனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது?பார்த்திபன் வேதனை

சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததால், என் நண்பன், சிந்தனையாளன், எழுத்தாளன், படைப்பாளி, நடிகன் வெங்கட் 12.48 am க்கு இறைவனடி சேர்ந்தார் என்பதை தாள முடியாத வேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன் என்று அறிவித்திருக்கிறார்.

மனைவி, மகனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது?பார்த்திபன் வேதனை

நடிகரும், திரைவிமர்சகருமான ’அம்மாகிரியேஷன்ஸ்’வெங்கட் கொரோனாவால் காலமானது குறித்து, இயக்குநர் பார்த்திபன், ‘’நண்பர் வெங்கட் கம்பீரமான தொனியுடன், அதிகார தோரணையுடன் அவர் வலம் வரும் அழகே தனி. ஒத்த செருப்பு-காக 24 மணிநேர விமர்சனம் செய்த நட்பை என்ன வென்று சொல்வது? மனைவி மகனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது? இனி என்ன செய்ய வேண்டும்? நண்பர்கள் அனைவரும் அவரது மகன் இத்துறையில் முன்னேற உதவ வேண்டும்.அதுவே…’’ என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.