மிகுந்த மனவேதனையில் விஜயகாந்த்
May 29, 2021, 12:17 IST1622270876000
தேமுதிக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சிவமுத்துகுமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கலில், ‘’தேமுதிக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சிவமுத்துகுமார், இன்று காலை உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் தேமுதிக நிர்வாகிகளுக்கு, தொண்டர்களுக்கு, உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்திருக்கிறார்.