பாலியல் புகார் விவகாரத்தில் நடிகை அடித்த அந்தர்பல்டி

 

பாலியல் புகார் விவகாரத்தில் நடிகை அடித்த அந்தர்பல்டி

பத்மா சேஷாத்ரி பால பவன்(பி.எஸ்.பி.பி. ) பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் வெடித்திருக்கும் நிலையில், அடையாறு இந்து ஸ்கூலில் படித்த நடிகை கவுரி கிஷன், பி.எஸ்.பி.பி. பள்ளி மாணவிகள் அனுபவித்தது போலவே, தானும் சக மாணவிகளும் அனுபவித்ததாக சொல்லி அதிர வைத்திருந்தார். படிக்கும் காலத்தில் இதை மனவலியுடன் பொறுத்துக்கொண்டதாகவும், தற்போது பிஎஸ்பிபி மாணவிகள் துணிச்சலாக வெளியே சொல்லி இருப்பதால் தானும் துணிச்சலாக சொல்லி இருப்பதாகவும் , இதனால் மனபாரம் இறங்கியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

பாலியல் புகார் விவகாரத்தில் நடிகை அடித்த அந்தர்பல்டி

பிஎஸ்பிபி விவகாரத்தை விடவும் கவுரி கிஷனின் பாலியல் புகார்தான் பரபரப்பாக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், தனக்கு பாலியல் துன்புறுத்தல் நேரவில்லை எனவும், தனது சக மாணவிகளுக்குத்தான் நேர்ந்ததாகவும் அந்தர்பல்டி அடித்திருக்கிறார்.

விஜய்சேதுபதி நடித்த ‘96’படத்தில் சின்ன வயசு த்ரிஷா கேரக்டரில் நடித்து அசத்தியவர் கௌரி கிஷன். அவர் ராஜகோபாலன் விவகாரத்தை கேள்விப்பட்டதும், தான் படித்த காலத்தில் அடையாறு இந்து சீனியர் செகண்ட்ரி பள்ளியில் நடந்ததை துணிச்சலாக சொல்லி இருந்தார்.

பாலியல் புகார் விவகாரத்தில் நடிகை அடித்த அந்தர்பல்டி

அவர், ’’என்னைப்போல பல மாணவிகள் பட்ட கஷ்டத்தை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. அடையாறு இந்து சீனியர் செகண்ட்ரி பள்ளியில் அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, பாடி லாங்வேஜ்ஜை வைத்து கிண்டல் செய்வது , மாணவ -மாணவிகள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்துவது என்று எத்தனை எத்தனை கொடுமைகள். வெளியே சொல்ல தைரியமின்றி அத்தனையையும் பொறுத்துக்கொண்டோம். எங்களை இந்த அளவுக்கு கஷ்டப்படுத்திய ஆசிரியர்களின் பெயர்களை நான் சொல்ல விரும்பவில்லை. பிஎஸ்பிபி மாணவிகளின் துணிச்சலுக்கு பிறகு நானும் இதையாவது சொல்ல முன் வந்திருக்கிறேன். அதனால் இத்தனை ஆண்டுகளாக என் நெஞ்சில் இருந்த பாரம் இறங்கியிருப்பதாக உணர்கிறேன்.’’என்று தெரிவித்திருந்தார்.

பாலியல் புகார் விவகாரத்தில் நடிகை அடித்த அந்தர்பல்டி

மேலும், ’’நான் மட்டுமல்ல; அந்த கஷ்டங்களை அனுபவித்த அத்தனை மாணவிகளுக்காகவும் நான் வருத்தப்படுகிறேன். என்னைப்போல் பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட வேண்டும். அப்போதுதான் இனியாவது இதுபோன்ற பிரச்சனைகள் வராது என்று நம்பிக்கையுடன் இருக்கலாம்’’ என்றும் தெரிவித்திருந்தார்.

பாலியல் புகார் விவகாரத்தில் நடிகை அடித்த அந்தர்பல்டி

இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ‘’நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு பாலியல் ரீதியான எந்த துன்புறுத்தலும் நடக்கவில்லை. ஊடகங்கள் பி.எஸ்.பி.பி பள்ளியுடன் என்னை தவறாக இணைக்கிறார்கள். இதனை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.