திமுக எழுப்பிய ‘அன்புச்சுவர்’திட்டம்

 

திமுக எழுப்பிய  ‘அன்புச்சுவர்’திட்டம்

ஏழை, எளிய மக்களுக்காக திமுக சார்பில் அன்புச்சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு தினமும் உணவளிக்கப்பட்டு வருகிறது.

திமுக எழுப்பிய  ‘அன்புச்சுவர்’திட்டம்

கொரோனா பொதுமுடக்கத்தினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள் ஏழை, எளிய மக்கள். வாழ்வாதாரம் இழந்து உணவுக்காகவும் தவிக்கும் அத்தகையோருக்கு உணவளிக்க ‘ஒன்றிணைவோம் வா’ நிகழ்ச்சியின் கீழ், விழுப்புரத்தில் அன்புச்சுவர் அமைத்திருக்கிறார் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் ரா.லட்சுமணன்.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளவனூர், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகைய் மூன்று இடங்களில் இத்தகைய அன்புச்சுவரை அவர் எழுப்பி இருக்கிறார். அமைச்சர் பொன்முடி இத்திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.

ஊரடங்கு அமலில் இருக்கும் வரை இவ்விடங்களில் தினமும் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் ரா.லட்சுமணன்.