வெங்காயத்தினால் கருப்பு பூஞ்சை பரவுகிறதா?

 

வெங்காயத்தினால் கருப்பு  பூஞ்சை பரவுகிறதா?

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு உண்டாகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் பலருக்கும் கருப்பு பூஞ்சைத் தொற்று வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் கொரோனா தொற்று ஏற்படாதவர்களுக்கும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெங்காயத்தினால் கருப்பு  பூஞ்சை பரவுகிறதா?

இந்த கருப்பு பூஞ்சை நோய் கண் மற்றும் நுரையீரலை அதிகம் பாதிக்கிறது என்றும் கொரோனா நோயாளிகளில் நீரிழிவு நோயாளிகளும், ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் மட்டுமே இந்த நோய் அதிகம் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கருப்பு பூஞ்சயினால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் நீரிழிவு நோயாளிகள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று தகவல்.

வெங்காயத்தினால் கருப்பு  பூஞ்சை பரவுகிறதா?

கருப்பு பூஞ்சை விவகாரத்தினால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோய் வெங்காயத்தின் மூலமாகவும் பரவுகிறது என்ற அதிர்ச்சித் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது .

வெங்காயத்தின் மேல் கருப்பாக இருக்கும், சில வெங்காயத்தை உரித்த பிறகும் அந்த வெங்காயத்தின் சதை மேல் கருப்பாக இருக்கும். இதுவும் ஒருவகை கருப்பு பூஞ்சை தான். இந்த கருப்பு பூஞ்சை மூலமாகவும் நமது உடலில் கருப்பு பூஞ்சை வைரஸ் பரவிவிடும் என்று தகவல்கள் வைரலாகி வருகிறது. ஆனால் மருத்துவ நிபுணர்கள் இதை மறுத்துள்ளனர்.

வெங்காயத்தினால் கருப்பு  பூஞ்சை பரவுகிறதா?

வெங்காயத்தின் மேல் இருக்கும் கருப்பு பூஞ்சை, பூமிக்கு அடியில் காணப்படும் பூஞ்சை தான். இந்த பூஞ்சை அஸ்பெர்கிலஸ் நைகர் எனப்படும். மேலும் இதற்கும் தற்போதைய கருப்பு பூஞ்சைக்கும் தொடர்புபடுத்தி மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இது போன்ற போலி செய்திகளை பரப்பி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்காதீர்கள். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.