சிரித்த முகத்துடன் பேசுவதால் கிரைண்டர் கல்லால் முகத்தை சிதைத்து கொன்ற கணவன்

 

சிரித்த முகத்துடன் பேசுவதால் கிரைண்டர் கல்லால் முகத்தை சிதைத்து கொன்ற கணவன்

சிரித்த முகத்துடன் எல்லோருடனும் பேசிவரும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன் ஏன் எல்லோரிடமும் சிரித்து பேசுகிறாய் என்று கேட்டு அடிக்கடி சண்டை போட்டிருக்கிறார். இதனால் அடிக்கடி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார் மனைவி. அடிக்கடி தாய் வீட்டுக்கு போய்விடுவதிலும் சந்தேகம் வந்திருக்கிறது கணவனுக்கு. இதனால் தூங்கும் போது மனைவியின் தலையை கிரைண்டர் கல்லால் நசுக்கி கொலை செய்திருக்கிறார் கொடூர கணவன்.

சிரித்த முகத்துடன் பேசுவதால் கிரைண்டர் கல்லால் முகத்தை சிதைத்து கொன்ற கணவன்

புதுச்சேரி மாநிலம் முத்திரை பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு. பால் வியாபாரியான இவர் சென்னையை சேர்ந்த ரதிகலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

இயல்பாகவே சிரித்த முகத்துடன் இருக்கும் ரதிகலா எல்லோரிடமும் அன்பாக சிரித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதை சந்தேகக் கண்கொண்டு பார்த்து வந்திருக்கிறார் பாபு. தன் மனைவி அழகாக இருப்பதால் அவர் தன்னை விரும்பவில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மையில் தான் அவர் இப்படி செய்து வந்திருக்கிறார்.

சிரித்த முகத்துடன் பேசுவதால் கிரைண்டர் கல்லால் முகத்தை சிதைத்து கொன்ற கணவன்

அவர் எதார்த்தமாக யாரையாவது பார்த்தால் கூட ஏன் குறுகுறுவென்று பார்க்கிறாய் என்று கேட்டு சண்டை போட்டிருக்கிறார் பாபு. இதனால் கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு சென்னையில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் ரதிகலா. சென்னையில் தன் மனைவிக்கு ஆண் நண்பர்கள் ஏதேனும் இருப்பார்களோ? அதனால் தான் அடிக்கடி அங்கே சென்று விடுகிறாளோ என்று தவறாக கணக்கு போட்ட பாபு, சென்னைக்கு சென்று இனிமேல் இங்கே வரக்கூடாது என்ற கண்டிப்புடன் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்.

வீட்டிற்கு வந்ததும் இரண்டு நாட்கள் அமைதியாக இருந்திருக்கிறார். அப்புறம் பழையபடி ஆரம்பித்திருக்கிறார் பாபு. ஏன் உன் கண்ணு அங்கே இங்கே அலைபாயுது என்று கேட்டிருக்கிறார். இல்லை நான் எதார்த்தமாக தானே இருக்கிறேன் என்று சொன்னாலும் ஏற்றுக் கொள்ளவில்லை. சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை காலையில் பால் கறப்பதற்காக சென்றபோது இருவருக்குள்ளும் இது சம்பந்தமான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது . பால் கறந்து விட்டு வந்து தூங்கியிருக்கிறார் ரதிகலா. ஆனால் சந்தேகத்தின் உச்சத்தில் தூக்கம் வரவில்லை பாபுவுக்கு. அவருக்கு தன் மனைவி தனக்கு எதிராக தான் செயல்படுகிறார் என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது. கிரைண்டர் கல்லை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் போட்டு தலையை நசுக்கி கொலை செய்திருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரதிகலாவின் உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, கொலை செய்த பாபுவை கைது செய்திருக்கிறார்கள்.

ரதி கலாவுக்கு செல்போன் கூட பயன்படுத்த தெரியாது . அப்படிப்பட்டவர் பலருடன் தொடர்பு இருப்பதாக தவறாக நினைத்து, பாபு கொன்று விட்டதாக உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.