குழந்தையும், மனைவியும் பிணவறையில்: தந்தை சிறையில்!

 

குழந்தையும், மனைவியும் பிணவறையில்: தந்தை சிறையில்!

வேறு பெண்ணுடன் கணவர் தொடர்பு வைத்திருந்ததால் அந்த பழக்கத்தை கைவிட மறுத்ததால் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி விட்டு காப்பாற்றச் சொல்லி தம்பிக்கு போன் போட்டு கதறி அழுதியிருக்கிறார். ஆனால் சிகிச்சை பலனின்றி தாயும் குழந்தையும் .

குழந்தையும், மனைவியும் பிணவறையில்: தந்தை சிறையில்!

திட்டக்குடி ராமநத்தம் ராஜனுக்கும், பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ராஜன் கொத்தனாராக இருக்கிறார். இதனால் அவர் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வேலை செய்து வந்துள்ளார். கொத்தனார் ஆக இருக்கும் ராஜனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது . இந்த பழக்கத்தை கைவிடும் படி சொல்லி ராஜனிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார் முத்துலட்சுமி. ஆனால் ராஜன் அந்த பெண்ணை கைவிட மறுத்து வந்துள்ளார்.

இதனால் கடந்த 7 மாதங்களாக ராஜனுக்கும் முத்துலட்சுமிம் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்துள்ளது. ஆனால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இரவு இவர்களுக்கு இடையே இந்த பிரச்சனை அதிகமாகியிருக்கிறது. இதில் மனம் உடைந்த முத்துலட்சுமி தனது 5 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி நான்கு வயதான நித்திலேஷ் என்ற மகனுக்கு விஷம் கொடுத்து உள்ளார். தாய் பால் கொடுப்பதாக நினைத்து அந்த குழந்தை ஆசை ஆசையாக குடித்திருக்கிறது. பின்னர் தானும் விஷம் குடித்திருக்கிறார்.

முத்துலட்சுமி விஷம் குடித்த பின்னர் அவருக்கு உயிர் வாழ வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது. உடனே தன் தம்பி சண்முகத்திற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, நடந்த பிரச்சனையை சொல்லி குழந்தையும் நானும் விஷம் குடித்து விட்டோம் என்ற விவரத்தையும் சொல்லி கதறி அழுதிருக்கிறார். இதை கேட்டு ஓடி வந்த தம்பி, முத்துலட்சுமியையும் நித்திலேசையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னரும் பலனின்றி உயிரிழந்தனர் என்று தெரிவித்தனர்.

முத்துலட்சுமியின் தம்பி கொடுத்த புகாரின் பேரில் ராஜனை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.