கொரோனாவால் திருமணம் தள்ளிப்போனதால் இளைஞர் தற்கொலை

 

கொரோனாவால் திருமணம் தள்ளிப்போனதால் இளைஞர் தற்கொலை

கொரோனாவினால் திருமணம் தள்ளிப்போனதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது பட்டுக்கோட்டையில்.

கொரோனாவால் திருமணம் தள்ளிப்போனதால் இளைஞர் தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வசித்தவர் மணிகண்டன்(27). கோவை நஞ்சுண்டாபுரத்தில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்ததால், அங்கேயே வாடகைக்கு அறை எடுத்து வேலை செய்து வந்தார்.

அங்கிருந்தபடியே தனது அக்காள் மகளுடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இதனால், இருவருக்குமிடையே காதல் உண்டானது. இவர்களது காதல் விவகாரம் குடும்பத்துக்கும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஒன்று கூடி பேசி, கொரோனா ஊரடங்கு முடிந்ததும் திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்தனர்.

ஆனால், தனக்கு இப்போது திருமணம் செய்து வைக்க வேண்டும் என தனது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் மணிகண்டன். இப்போது இருக்கும் சூழலில் அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று கறாராக சொல்லிவிட்டனர் பெற்றோர்.

அக்காள் மகளிடம் இப்போதே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று போனில் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் அவர் மணிகண்டனிடம் பேசுவதை நிறுத்துவிட்டார். தொடர்ந்து போன் செய்து அக்காள்மகள் போனை எடுத்து பேசாததால் விரக்தி அடைந்த மணிகண்டன், வேலைக்கு செல்லாமல் அறையில் தங்கியிருந்துள்ளார். விரக்தியின் உச்சத்தில் தூக்குப்போட்டு தற்கொலையும் செய்து கொண்டார்.

போத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.