நடிகர் வடிவேலு சொல்லும் கொரோனா டீ

 

நடிகர் வடிவேலு சொல்லும் கொரோனா டீ

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நடிகர் வடிவேலு மக்களுக்கு ஆறுதல் சொல்லி ஒரு வீடியோவினை வெளியிட்டிருக்கிறார்.

நடிகர் வடிவேலு சொல்லும் கொரோனா டீ

அந்த வீடியோவில், ‘’கொரோனான்னு வந்திருக்கு பாருங்க.. பீதி மேல பீதி. யாரையும் தொட்டு பேசக்கூடாது. யாரும் வெளியே போகக்கூடாது. ஒருத்தரோரு ஒருத்தர் கை கொடுக்க கூடாது. நம்ம கையையே சேர்த்து வைக்கக்கூடாதாம். அத கூட தள்ளி தள்ளி வைத்துதான் கும்பிடணுமாம். ஒரு நாளைக்கு நம்ம கை நம்மள அறியாமலேயே 200 தடவை மூக்கு, கண், வாய்க்குள் போகுது. அத கண்ட்ரோல் பண்ண முடியுமா? மருத்துவ உலகத்தையும், மனித உலகத்தையும் மிரட்டி வச்சிருக்குது இந்த கொரோனா.

என்னைய ஒரு அம்மா கேட்டாங்க… சார் நீங்க எப்ப நடிக்க போறீங்கண்ணு..? அதுக்கு நான் சொன்னேன்.. நடிக்க வர்றதுக்கும் இப்ப யாரும் தயாரா இல்ல..படம் எடுக்குறதுக்கும் யாரும் தயாரா இல்ல; படம் பார்க்குறதுக்கும் யாரும் தயாரா இல்ல. ஆக நடக்காதுன்னு சொல்லிட்டேன்.

இறைவன் கொரோனா எனும் படத்தினை ரிலீஸ் செய்திருக்கான். இந்த படத்தை எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருந்து பாருங்கடான்னு சொல்லுறான் இறைவன். படத்தை ரிலீஸ் பண்ணுன இறைவன், படத்தை எப்ப தூக்குவான்னு தெரியல. அவன் படத்த தூக்குனாத்தான் நாம எல்லோரும் வெளியே வரமுடியும்.

நடிகர் வடிவேலு சொல்லும் கொரோனா டீ

சும்மா உட்கார்ந்திருக்கிறது எவ்வளவு சிரமம் தெரியுமான்னு கேட்டு ஒரு படத்துல நடிச்சிருப்பேன். ஆனால் நிஜத்துல எல்லோருமே சும்மா உட்காந்திருந்தா எப்படி இருக்கும்னு உணரவைக்கிறான் பாருங்க இறைவன்.

அரசு சொல்லுறத கேட்டு கொரோனாவை வெல்வோம். தேவைக்கு மட்டும் வெளியே வாங்க. அப்படி வரும்போது மாப்ளே..மச்சான்னு கட்டுப்பிடிச்சுக்காதீங்க’’என்று சொல்லும் வடிவேலு,

கொரோனாவை கண்டு ரொம்ப பயப்படாதீங்க. ’’இஞ்சி, லெமன், புதினா.. அதை வச்சு ஒரு டீ போட்டு குடிங்க. எல்லாம் சரியாகிடும். இல்லேன்னா இஞ்சி, லெமன், துளசி, வேப்பிலை போட்டு தண்ணியில நல்லா போட்டு கலக்கி ஆவி பிடிங்க’’ என்று சொல்கிறார்.