சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது; முதியவர் கைது

 

சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது; முதியவர் கைது

பதினாறு வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து 75 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது; முதியவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரத்தில் வசிக்கும் அன்வர்(வயது75), வேப்பூரில் வசித்து வரும் 16 வயது சிறுமியுடன் பழகி வந்திருக்கிறார். முதியவர் என்பதால் சிறுமி நம்பிக்கையுடன் பேசி வந்திருக்கிறார். நாளடைவில் சிறுமியிடம் சில்மிஷம் செய்ய ஆரம்பித்துள்ளார். இதனால் அச்சிறுமி அன்வரிடம் பழகுவதை நிறுத்தி இருக்கிறார்.

ஆனால், சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்து பாலியல் தொந்தரவு செய்து வந்த அன்வர், பாலியல் பலாத்காரமும் செய்திருக்கிறார். இதுகுறித்து வெளியே சொல்ல பயந்து சிறுமி தனக்கு நேர்ந்ததை யாரிடமும் சொல்லாமல் இருந்துவிட்டார்.

சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது; முதியவர் கைது

இந்நிலையில் அச்சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துவிட்டதால், ஊரார் அனைவருக்கும் விசயம் தெரிந்துவிட்டது. இதையடுத்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அன்வரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் போலீசார்.