மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது தவறானது…ராமதாஸ்

 

மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது தவறானது…ராமதாஸ்

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வல்ல என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது தவறானது என்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். அவர் மேலும் இதுகுறித்து, ஊரடங்கு வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பது உண்மை தான். ஆனால், மக்களின் உயிரை ஊரடங்கு தான் காக்கும் என்பதை முதலமைச்சர் அறிந்திருப்பார் என்று நம்புகிறேன் என்கிறார்.

மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது தவறானது…ராமதாஸ்

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திமுக ஆட்சிபொறுப்பேற்றது முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில், தொழில்நிறுவனங்களுடன் முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர், கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரு காரணியாகவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு தீர்வல்ல என்று கூறியிருந்தார்.

முதல்வரின் இந்த கருத்து குறித்துதான் ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.