பூதிப்புரம் லட்சுமணன், இராமமூர்த்தி செய்தி அறிந்து…ராமதாஸ் வேதனை

 

பூதிப்புரம் லட்சுமணன், இராமமூர்த்தி செய்தி அறிந்து…ராமதாஸ் வேதனை

பாட்டாளி மக்கள் கட்சியின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் இராமமூர்த்தி, ஆத்தூர் தொகுதி பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த ரெட்டியார் சத்திரம் ஒன்றிய பா.ம.க தலைவர் லட்சுமணன் ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

பூதிப்புரம் லட்சுமணன், இராமமூர்த்தி செய்தி அறிந்து…ராமதாஸ் வேதனை

அவர் மேலும், ‘’பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் வன்னியர் சங்க காலத்திலிருந்து இயக்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். பாட்டாளி மக்கள் கட்சியிலும் தொடக்கம் முதலே தீவிரமாக உழைத்தவர். மாவட்ட அமைப்பு செயலாளர் இராமமூர்த்தி கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர். கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நிலக்கோட்டை தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டவர்.

பூதிப்புரம் லட்சுமணன், இராமமூர்த்தி செய்தி அறிந்து…ராமதாஸ் வேதனை

பூதிப்புரம் லட்சுமணன், இராமமூர்த்தி ஆகிய இருவரையும் இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், பா.ம.க.வினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.