மாஜி அமைச்சரை நக்கலடித்து பேச்சு

 

மாஜி அமைச்சரை நக்கலடித்து பேச்சு

நடந்து முடிந்த தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக உழைத்தவர்களை நேரில் சந்தித்து நன்றி சொல்லி வருகிறார் உதயநிதிஸ்டாலின். அந்த வகையில் கடந்த 13ம் தேதி அன்று திராவிட இயக்க எழுத்தாளரும், பேச்சாளருமான மதிமாறனை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி சொன்னார் உதயநிதி.

மாஜி அமைச்சரை நக்கலடித்து பேச்சு

அதுகுறித்து அவர் அன்றைக்கு தனது டுவிட்டர் பக்கத்தில், திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு பேச்சாளர்-எழுத்தாளர். கொள்கைவழி எதிரிகளுக்கு உறுதியுடன், துணிச்சலுடன் கருத்தால் பதிலடி கொடுக்கும் அன்பு அண்ணன் மதிமாறன் அவர்களை சந்தித்து அவரது அன்பையும், வாழ்த்தையும் பெற்றேன். என்னை வாழ்த்திய அண்ணன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நன்றி.’’என்று தெரிவித்திருந்தார்.

மாஜி அமைச்சரை நக்கலடித்து பேச்சு

இதையடுத்து, ‘’ஓயாத அலையாக பிரச்சாரம் செய்து கட்சியை ஜெயிக்க வைத்தவர் எனக்கு நன்றி சொல்கிறார். திமுகவின் மாபெரும் வெற்றி அவரை இன்னும் எளிமையாக்கியிருக்கிறது. தலைமை பண்பு உதயநிதிஸ்டாலின்’’என்று பதிலுக்கு மதிமாறனும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மாஜி அமைச்சரை நக்கலடித்து பேச்சு

இந்நிலையில் இன்றைக்கு, ‘’சொல்ல மறந்துட்டேன் உதயநிதி MLAவிடம், ராயபுரத்தில் மெயின்ரோடு காணாமல் போனதுக்கு நீங்க முக்கியக் காரணம் என்பதை. வெற்றிபெற்றவர் பிரமுகர் ஆகிறார். ஆனால் ஒரு பிரமுகரே வெற்றி பெற்றிருக்கிறார். அவரை எல்லோரும் சென்று சந்திப்பது வழக்கம். அவரோ என்னைப் போன்ற சாமான்யர்களையும் நேரில் சந்திக்கிறார். அரசியலில் புதிய பண்பாட்டை துவக்கி வைத்திருக்கிறார் உதயநிதி. சிறப்பு.’’என்று சொல்லி இருக்கிறார் மதிமாறன்.