பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி; கமல் புகழஞ்சலி

 

பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி; கமல் புகழஞ்சலி

கரிசல் இலக்கிய தந்தை என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன்(99) நேற்று காலமானார். புதுச்சேரியில் வசித்து வந்த அவர், மூப்பின் காரணமாக உயிரிழந்தார். புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள அவரது உடல், செவ்வாய்கிழமை இன்று மாலை கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி; கமல் புகழஞ்சலி

பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், ‘’கரிசல் என்னும் வட்டாரத்தை எழுதி பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி கி.ராஜநாராயணன் நம்மை நீங்கினார். அவருக்குப் புகழஞ்சலி.’’என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி; கமல் புகழஞ்சலி