பொதுமக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்

 

பொதுமக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்

முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். இச்சந்திப்பின் போது கொரோனா நிவாரணத்திற்காக முதல்வர் பொது நிவாரணத்திற்கு 50 லட்சம் ரூபாய் ஸ்டாலினிடம் நேரடியாக நிதி அளித்தார் ரஜினிகாந்த்.

பொதுமக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்

ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா 1 கோடி ரூபாய் முதல்வர் ஸ்டாலினிடம் நிதி அளித்திருந்த நிலையில், ரஜினிகாந்தும் 50 லட்சம் ரூபாய் நிதி அளித்திருக்கிறார்.

முதல்வரை சந்தித்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்த்தை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர், ‘’கொரோனாவை ஒழிக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழக அரசின் அனைத்து கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். கட்டுப்பாடுகளை கடைப்பி்டித்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும்’’ என்று கேட்டுக்கொண்டார்.