தமிழக மக்களின் சார்பாக பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி
May 16, 2021, 16:37 IST1621163255000
தமிழகத்திற்கு ரெம்டெவிசர் மருந்து ஒதுக்கீட்டை கூடுதலாக 3.50 லட்சமாக அதிகரித்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய அரசிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் எல்.,முருகன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. ஏற்கனவே 25 லட்சம் ரெம்டெசிவிர் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக நலன் கருதி தமிழகத்திற்காக 3.50 லட்சமாக அதிகரித்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் தமிழக மக்களின் சார்பாகவும், தமிழக பாஜக சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.