கொரோனாவால் இன்று ஒரே நாளில் 26 பேர் மரணம்.. சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்!

 

கொரோனாவால் இன்று ஒரே நாளில் 26 பேர் மரணம்.. சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பெருமளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தும், பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனிடையே கொரோனாவால் போடப்பட்டிருந்த ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டதால் தான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக முதியவர்கள் தான் கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், இளம் வயதினர்களும் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கொரோனாவால் இன்று ஒரே நாளில் 26 பேர் மரணம்.. சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்!

இந்நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 26 பேர் கொரோனாவால் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை- 9 பேர் , ஸ்டான்லி அரசு மருத்துவமனை- 5 பேர் , கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை-4 பேர் , இஎஸ்ஐ மருத்துவமனை- 2 பேர் , ரயில்வே மருத்துவமனை- 3 பேர் , ஓமந்தூரார் அரசு மருத்துவமனை-2 பேர் என மொத்தம் 26 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர்.