கொரோனாவிலும் அசராமல் அடிக்கும் ரஜினி!

 

கொரோனாவிலும் அசராமல் அடிக்கும் ரஜினி!

கட்சி தொடங்க வேண்டும் என்று ரசிகர்கள் நச்சரித்தபோதே, அப்படியானால் முதலில் பூத் கமிட்டி அமைத்துவிட்டு வாருங்கள். அதில் திருப்தி இருந்தால் கட்சி தொடங்குவது பற்றி பேசலாம் என்று தொடக்கத்திலேயே பூத் கமிட்டியில்தான் குறியாக இருந்தார் ரஜினி. இப்போது அதில்தான் குறியாகவும், கவனத்துடனும் இருக்கிறார்.

கொரோனாவிலும் அசராமல் அடிக்கும் ரஜினி!

அண்ணாத்த படப்பிடிப்புக்காக வர் ஐதராபாத் சென்றபோதே, தான் திரும்பி வருவதற்குள் பூத் கமிட்டி எண்ணிக்கை லிஸ்ட் தன் கைக்குள் வந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படியே மன்றத்தினரும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரமாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்தவர்ககள் 6 பேருக்கு கொரோனா தொற்று இருந்ததால் படப்பிடிப்பு பாதியில் நின்றுவிட்டதால், சென்னை திரும்பிய ரஜினிகாந்த், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

கொரோனாவிலும் அசராமல் அடிக்கும் ரஜினி!

கொரோனா அச்சத்தினால்தான் அண்ணாத்த படப்பிடிப்பை தவிர்த்து வந்த ரஜினிகாந்த், கட்சி தொடங்கும் ஜெட் வேக முடிவில் இருந்து ஆமை வேக தடுமாற்றத்திற்கு வந்தார். பின்னர்தான் என் உயிரே போனாலும் பரவாயில்லை என்று கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்தார். வரும் 31ம் தேதி கட்சி அறிவிப்பை வெளியிடுவேன் என்று சொன்னார்.

இந்நிலையில், கொரோனா அச்சத்தினால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் ரஜினி, திட்டமிட்டபடி 31ம்தேதி கட்சி அறிவிப்பினை வெளியிடுவாரா? என்று சந்தேகம் எழுந்திருக்கிறது.

ஆனால், சந்தேகமே வேண்டாம். திட்டமிட்டபடி கட்சி அறிவிப்பை வெளியிடுவேன் என்று சொல்வது மாதிரி ஒரு செயலை செய்திருக்கிறார் ரஜினி.

கொரோனாவிலும் அசராமல் அடிக்கும் ரஜினி!

வரும் 26ம் தேதி 3 மணிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர் விபரங்களை அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். கால அவசரம் கருதி மின்னஞ்சலில் அனுப்பி வைக்க உத்தரவிட்டிருக்கிறார்.

மன்ற நிர்வாகி வி.என்.சுதாகர் மூலமாக இந்த உத்தரவினை அவர் தெரிவித்திருக்கிறார்.

31ம் தேதி கட்சி அறிவிக்கும் முடிவில்தான் அதற்குள் இந்த விபரங்களை அவசர அவசரமாக அனுப்ப சொல்லி இருக்கிறார் ரஜினி என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.