பிரார்த்தனைகளால் நலமுடன் திரும்பியுள்ளேன்… நெகிழும் பொன்னார்

 

பிரார்த்தனைகளால் நலமுடன் திரும்பியுள்ளேன்… நெகிழும் பொன்னார்

கொரோனா இரண்டாவது அலையில் சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பிரார்த்தனைகளால் நலமுடன் திரும்பியுள்ளேன்… நெகிழும் பொன்னார்

முன்னாள் மத்திய அமைச்சர் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த 6ம் தேதி அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

வீடு திரும்பி்ய பொன்.ராதாகிருஷ்ணன், ‘’பா.ஜ.கவின் தலைவர்கள், தாமரை சொந்தங்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவரின் வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளால் நலமுடன் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளேன். அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.