ஓபிஎஸ்க்கு ஆறுதல் சொல்லும் எடப்பாடியார்

 

ஓபிஎஸ்க்கு ஆறுதல் சொல்லும் எடப்பாடியார்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.பாலமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்த நிலையில் மரணம் அடைந்தார். இதுகுறித்து, கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இளைய சகோதரர் ஓ.பாலமுருகன் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி.

ஓபிஎஸ்க்கு ஆறுதல் சொல்லும் எடப்பாடியார்

அவர் மேலும், .ஓ.பாலமுருகன் அவர்களை இழந்துவாடும் அண்ணன் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.