ஒரு மாத சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்த பாமக எம்.எல்.ஏக்கள்

 

ஒரு மாத சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்த பாமக எம்.எல்.ஏக்கள்

பாமக எம்.எல்.ஏக்கள் ஐந்து பேரும், அன்புமணி ராமதாசும் கொரோனா நிவாரண நிதிக்காக தங்களது ஒரு மாத சம்பளத்தை அளிப்பதாக அறிவித்துள்ளனர் .

ஒரு மாத சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்த பாமக எம்.எல்.ஏக்கள்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கும் படி தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை ஏற்று பாமக சார்பில் அதன் மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் 5 பேர் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக வழங்கி விடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக திரட்டப்படும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வசதி படைத்த அனைவரும் தாராளமாக நன்கொடை வழங்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.