ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியை இல்லாதோர்க்கு கொடுத்து… டிடிவி தினகரன்

 

ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியை இல்லாதோர்க்கு கொடுத்து… டிடிவி தினகரன்

ஈகைத்திருநாளான ரமலான் பெருநாளைக் கொண்டாடும் நேசத்திற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியை இல்லாதோர்க்கு கொடுத்து… டிடிவி தினகரன்

அவர் மேலும், ஈகைத் திருநாளான ரமலான் பெருநாளை கொண்டாடும் நேசத்திற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியை இல்லாதோர்க்கு கொடுத்து, இறைவனை வணங்கி இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ரமலானை கொண்டாடுகிறார்கள் .

புனித ரமலான் நாளில் நபி பெருமகனார் போதித்த அன்பு, ஈகை, மனிதநேயம், கோபம் தவிர்த்தல் போன்ற நற்பண்புகளின் வழியாக சிறந்த மனித சமுதாயத்தை அமைத்திட அனைவரும் உறுதியேற்போம். மேலும் கொரோனா எனும் பேரிடர்களில் இருந்து மனித குலம் முற்றிலுமாக மீண்டும் எழுச்சி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்ததற்கான நம்பிக்கையை நம்மைச் சுற்றியிருக்கிற அனைவரும் ரமலான் பெருநாள் விதைதிடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.