எதையும் தாங்கும் பொறுமையும், யாவரையும் புரிந்து கொள்ளும் தன்மையும்… ஈபிஎஸ் உருக்கம்

 

எதையும் தாங்கும் பொறுமையும், யாவரையும் புரிந்து கொள்ளும் தன்மையும்… ஈபிஎஸ் உருக்கம்

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று உலக செவிலியர் தினத்தினை முன்னிட்டு, ’’செவிலியர்களின் தியாகங்களை போற்றுவோம்’’என்று தெரிவித்திருகிறார்..

எதையும் தாங்கும் பொறுமையும், யாவரையும் புரிந்து கொள்ளும் தன்மையும்… ஈபிஎஸ் உருக்கம்

அவர் மேலும், ‘’எதையும் தாங்கும் பொறுமையும், யாவரையும் புரிந்து கொள்ளும் தன்மையும் கொண்டு இரவு பகல் பாராது தன்னை வருத்தி பிறரை காக்கும் தன்னலமற்ற செவிலியர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்’’ என்கிறார்.

’’கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மை காக்க தன்னலம் கருதாமல் உழைக்கும் அனைத்து செவிலியர்களையும் செவிலியர் தினத்தன்று வாழ்த்தி வணங்குகின்றேன்.’’என்று தெரிவித்திருக்கும் எடப்பாடியாருக்கு இன்று பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.