அந்த அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்..ஓபிஎஸ்
May 12, 2021, 12:36 IST1620803188000
அன்பு, தியாகம், பொறுமை, சேவையின் திருஉருவமாக பிணிகளின் பிடியிலிருந்து உலகை காத்துக் கொண்டிருக்கும் செவிலியர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான உலக செவிலியர் தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
இன்று உலக செவிலியர்கள் தினத்தினை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும், கொரோனாவிற்கு எதிரான அறப்போரில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து கண்துஞ்சாது அர்ப்பணிப்போடு போராடிக் கொண்டிருக்கும் தாயுள்ளங்களாம் செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடுவோம். உலக மக்களின் உயிர்காக்க போராடும் செவிலியர்களின் சேவைகளுக்கு இவ்வுலகில் ஈடேதுமில்லை. செவிலியர்களின் அர்ப்பணிப்பிற்கு தலைவணங்கி, அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் நலமுடன் வாழ மனதார வாழ்த்துவோம்.’’என்று தெரிவித்துள்ளார்.