’முழு அடைப்பை அரசு அறிவிக்கலாம். ஆனால் மூச்சின் முடிவை?’’

 

’முழு அடைப்பை  அரசு அறிவிக்கலாம். ஆனால் மூச்சின் முடிவை?’’

கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்துவருவதால் அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் நாளை முதல் 24ம் தேதி வரைக்கும் 2 வாரங்களூக்கு முழு ஊரடங்கினை அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

’முழு அடைப்பை  அரசு அறிவிக்கலாம். ஆனால் மூச்சின் முடிவை?’’

இந்நிலையில், கொரோனா மற்றும் முழு ஊரடங்கினால் மக்களின் மனநிலை குறித்து இயக்குர் பார்த்திபன்,

துயரத்தின் உயரத்தில் உலகம்
இருப்பதாகப் பார்ப்பது ஒரு பார்வை.
ஆனால்…தோ..விடிந்திருக்கிறது நமக்கு.
எவ்வளவு நாட்கள் நமக்கிப்படி விடியும்?
அது சுவாரஸ்யமான ரகசியம்.
முழு அடைப்பை அரசு அறிவிக்கலாம். ஆனால்
மூச்சின் முடிவை?
சத்து மாவு உருண்டைப் போல, சர்வ சக்தி
வாய்ந்த இப்பூமி இன்று நமக்கு, புசிப்போம்-
பசிப்போருக்கும் வழங்கி.
results – negativeஆக வந்தால் தான் நாம்
positive ஆன மனநிலையில் இருக்க வேண்டும்
என்பதில்லை. எந்நேரமும் நாம் positive ஆக
இருந்தாலே results – negative ஆகவே வரும்.
ஆகவே நன் நம்பிக்கையுடன் பிற உயிருக்கு
உதவி அக்கர்வத்தில் மகிழ்வாய் வாழ்வோம்!
-என்று குறிப்பிட்டிருக்கிறார்.