திண்டுக்கல் ஐ.லியோனி, நாஞ்சில் சம்பத்துக்கு நன்றி தெரிவித்த உதயநிதி

 

திண்டுக்கல் ஐ.லியோனி, நாஞ்சில் சம்பத்துக்கு நன்றி தெரிவித்த உதயநிதி

திமுகவுக்காக அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழகம் முழுவதும் சுற்றி தீவிர பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார். அதே போல், திமுக பேச்சாளரான நாஞ்சில் சம்பத்தும் தமிழகம் முழுவதும் சுற்றி திமுகவுக்கு வாக்குகள் சேகரித்தார்.

திண்டுக்கல் ஐ.லியோனி, நாஞ்சில் சம்பத்துக்கு நன்றி தெரிவித்த உதயநிதி

இவ்விருவரையும் நேரில் சந்தித்து நன்றி கூறிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் தான் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார்.

திண்டுக்கல் ஐ.லியோனி, நாஞ்சில் சம்பத்துக்கு நன்றி தெரிவித்த உதயநிதி

இதுகுறித்து அவர், ‘’கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் – தமிழகம் முழுவதும் சுற்றி சுழன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணன் திண்டுக்கல் லியோனி அவர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றேன். என்னை அன்போடு வரவேற்று வாழ்த்திய அண்ணன் அவர்களுக்கு நன்றி.’’என்று தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் ஐ.லியோனி, நாஞ்சில் சம்பத்துக்கு நன்றி தெரிவித்த உதயநிதி

’’திராவிட இயக்கத்தின் நயமிகு பேச்சாளர் – என் மீது மாறா பாசம் கொண்ட அன்பு அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்களை சந்தித்து அவரது வாழ்த்துகளை பெற்றேன். கழக வெற்றிக்காக பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணன் அவர்களுக்கு அன்பும், நன்றியும்.’’என்று தெரிவித்துள்ளார் உதயநிதி.

திண்டுக்கல் ஐ.லியோனி, நாஞ்சில் சம்பத்துக்கு நன்றி தெரிவித்த உதயநிதி