அத்துமீறிய திமுக வ.செ. :ஆவேசமான மாஜி அமைச்சர் ஜெயக்குமார்

 

அத்துமீறிய திமுக வ.செ. :ஆவேசமான மாஜி அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ராயபுரத்தில் திமுக வட்டச்செயலாளர் ராஜேந்திரனின் அராஜக செயல் குறித்து முன்னாள் அமைச்சரும், ராயபுரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஜெயக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அத்துமீறிய திமுக வ.செ. :ஆவேசமான மாஜி அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் லோகநாதன் என்பவர் துப்புரவு பணியாளராக இருந்து வருகிறார். லோகநாதன் வழக்கம்போலவே பணிக்கு சென்றபோது, அங்கு வந்த திமுக வட்டச்செயலாளர் புகழேந்தி, 52வது வட்டத்தில் உள்ள அனைத்து கழிப்பிடங்களும் தனது கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. புகழேந்தியும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து லோகநாதன் சரமாறியாக தாக்கி இருக்கிறார்கள்.

இதில் படுகாயமடைந்த லோகநாதன் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து போலீசார், புகழேந்தி அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது.

நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இதுபற்றிய செய்தி மற்றும் வீடியோவினை ராயபுரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.