யோகா டீச்சர் சித்ராவை கொன்று வீட்டிலேயே புதைத்த காதலன் குற்ற உணர்ச்சியில் தற்கொலை

 

யோகா டீச்சர் சித்ராவை கொன்று வீட்டிலேயே புதைத்த காதலன் குற்ற உணர்ச்சியில் தற்கொலை

கணவனை பிரிந்து வாழ்ந்த யோகா டீச்சர் சித்ராவும், மனைவியை பிரிந்து வாழ்ந்த வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணனும் காதலித்து வந்த நிலையில், திடீரென காணாமல் போனார் சித்ரா. விவகாரம் பெரிதாகி சித்ராவை போலீஸார் தேடிவரும் சமயத்தில், சித்ராவை கொலை செய்து வீட்டு கழிவறையில் புதைத்து வைத்திருப்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன். இச்சம்பவம் மதுரை மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

யோகா டீச்சர் சித்ராவை கொன்று வீட்டிலேயே புதைத்த காதலன் குற்ற உணர்ச்சியில் தற்கொலை

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் கற்பகநகர் அருகே ஆறுமுக நகரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். 45வயதான இவர் தனது 35 வயது மனைவி விஜியை விவகாரத்து செய்துவிட்டு 10 வயது பெண் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இதே மாதிரி, பசும்பொன் தெருவில் வசித்து வந்த 32 வயாதான யோகா டீச்சர் சித்ராதேவி, தனது கணவர் தங்கராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்து தனது தந்தை கண்ணையாவுடன் வாழ்ந்து வந்தார்.

ஹரி கிருஷ்ணனின் மகள், சித்ராவிடம் யோகா கற்று வந்துள்ளார். இதற்காக தினமும் சித்ரா வீட்டிற்கு மகளை அழைத்துக்கொண்டு போய் விடுவதும், பின்னர் திரும்ப அழைத்து வருவதுமாக இருந்துள்ளார். இதில் ஏற்பட்ட பழக்கம், இருவருமே துணையை பிரிந்து வாழ்ந்து வந்ததால் நெருக்கம் அதிகமானது. இருவரும் காதலர்களாக பழகிவந்துள்ளனர்.

யோகா டீச்சர் சித்ராவை கொன்று வீட்டிலேயே புதைத்த காதலன் குற்ற உணர்ச்சியில் தற்கொலை

இந்நிலையில் திடீரென்று கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி அன்று தனது இருசக்கர வாகனத்துடன் சென்ற சித்ரா திரும்பி வரவே இல்லை. எங்கெல்லாமோ தேடிப்பார்த்த சித்ராவின் தந்தை கண்ணயா, கடந்த ஏப்ரல் 5ம் தேதி திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார். தனது மகளுக்கும் ஹரிகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருக்கிறது என்று அவர்களிருவரும் பேசிய ஆடியோவை போலீசிடம் கொடுத்து, சித்ராவை ஹரிகிருஷ்ணன் கொலை செய்திருக்கலாம் என்றும் தனது சந்தேகத்தை போலீசிடம் சொன்னார் கண்ணையா. மதுரை காவல் ஆணையரிடமும் புகார் தெரிவித்து பார்த்த கண்ணையா, நடவடிக்கை எதுவும் இல்லாததால், முதல்வர் தனிப்பிரிவுக்கும் புகார் அளித்து பார்த்துவிட்டார்.

யோகா டீச்சர் சித்ராவை கொன்று வீட்டிலேயே புதைத்த காதலன் குற்ற உணர்ச்சியில் தற்கொலை

ஆனாலும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக கண்ணயா சொல்லி வந்த நிலையில், நேற்று ஹரிகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதி வைத்திருக்கும் கடிதத்தில், சித்ராவை தானே கொலை செய்து தன் வீட்டில் உள்ள கழிவறையில் புதைத்து வைத்திருப்பதாகவும், சித்ராவின் டூ வீலரை மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள டூவீலர் ஸ்டாண்டில் விட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இருவரும் மனம் ஒத்து காதலித்து வந்த நிலையில் சித்ரா ஏன் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.