மக்களின் நம்பிக்கையை சிதைக்கும்… காங்., எம்.பி. ஜோதிமணி கண்டனம்

 

மக்களின் நம்பிக்கையை சிதைக்கும்… காங்., எம்.பி. ஜோதிமணி கண்டனம்

சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர்ப்பலகை, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படம், உணவகத்தில் இருந்த காய்கறிகள் உள்ளிட்ட சமையல் பொருட்கள் ஆகியவற்றை திமுகவினர் சூறையாடியிருப்பதை கண்டு, அதிமுக நிர்வாகிகள் மற்றும் டிடிவி தினகரன், ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

மக்களின் நம்பிக்கையை சிதைக்கும்… காங்., எம்.பி. ஜோதிமணி கண்டனம்

விவகாரம் பெரிதாவதை உணர்ந்த ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதுகுறித்து முன்னாள் சென்னை மேயரும், சைதாப்பேட்டை எம்.எல்.ஏவுமான மா.சுப்பிரமணியன், ‘’மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்’’என்று சொல்லி, மீண்டும் பெயர்ப்பலகையை வைத்த வீடியோவினையும் வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ‘’மக்களின் நல்லெண்ணம், நம்பிக்கையை சிதைக்கும் எந்தவொரு செயலையும் எவரும் செய்ய அனுமதிக்கக்கூடாது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.’’என்று தெரிவித்துள்ளார்.