’’திமுகவினர் திருந்தவே மாட்டார்கள்; தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும்’’-டிடிவி தினகரன்

 

’’திமுகவினர் திருந்தவே மாட்டார்கள்; தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும்’’-டிடிவி தினகரன்

திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில் சென்னை மதுரவாயல் தொகுதியில் உள்ள ஜெ.ஜெ.நகரில் உள்ள அம்மா உணவகத்தினை திமுகவினர் அடித்து நொறுக்கி சூறையாடியதாக வீடியோ ஒன்று வைரலானது. இதையடுத்து திமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கூட்டணி கட்சியினான பாஜகவினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

’’திமுகவினர் திருந்தவே மாட்டார்கள்; தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும்’’-டிடிவி தினகரன்

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘’சென்னை முகப்பேரிலுள்ள அம்மா உணவகத்தை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கி சூறையாடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் உணவகத்தில் தி.மு.க.வினர் இப்படி நடந்துகொள்வது வேதனையளிக்கிறது. ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட தி.மு.க.வினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ? என்கிற கவலை இந்தக் காணொளியைக் காணும்போது ஏற்படுகிறது. தி.மு.க.வினர் ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள் என்பதற்குச் சாட்சியாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். ’’என்று தெரிவித்துள்ளார்.

அம்மா உணவகம் சூறையாடல் சம்பவத்திற்கு திமுக நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. ஆனாலும், அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்கிற பதைப்பில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் அதிமுகவினர்.