’’நாஞ்சில் சம்பத்துக்கு கருநாக்கா? அமைச்சர் விசயத்தில் அவர் சொன்னது பலித்தது!’’

 

’’நாஞ்சில் சம்பத்துக்கு கருநாக்கா? அமைச்சர் விசயத்தில் அவர் சொன்னது பலித்தது!’’

நாஞ்சில் சம்பத்துக்கு கருநாக்கு போலிருக்கிறது. அதனால்தான் அவர் சொன்னது பலித்தது என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

’’நாஞ்சில் சம்பத்துக்கு கருநாக்கா? அமைச்சர் விசயத்தில் அவர் சொன்னது பலித்தது!’’

கடந்த 29ம் தேதி அன்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் 160 முதல் 170 சீட்டுகள் பெற்று திமுக ஆட்சியை பிடிக்கும் என்று சொல்லி இருந்ததற்கு, அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ‘’நேற்று வெளியானது கருத்து கணிப்பு அல்ல, அது கருத்து திணிப்பு’’என்று தெரிவித்தார். மேலும், பல கட்டங்களில் கருத்து திணிப்பை அதிமுக தவிடுபொடியாக்கிவிட்டு இமாலய வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதன் பின்னர், திமுகவில் பேச்சாளராக இருக்கும் நாஞ்சில் சம்பத், ‘’ஜெயக்குமார் சொன்னதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதுதான் அவருக்கு கடைசி பேட்டியாக இருக்கும். இனி அவர் ஊடகங்களில் பேட்டி கொடுக்கும் வாய்ப்பு கிடைக்காத நிலை வரப்போகிறது’’என்று தெரிவித்திருந்தார். அவர் மேலும், ‘’அவர் மட்டுமல்ல அதிமுகவை இன்றைக்கு தனதாக்கிக்கொண்டு தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அத்துனை பேரும் மோசமாக நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள். அதிமுகவில் நடக்கப்போகும் ரசாயண மாற்றத்தில் முதலில் ஓரங்கட்டப்படப் போகிறவர் ஜெயக்குமாராகத்தான் இருக்கும்’’என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

’’நாஞ்சில் சம்பத்துக்கு கருநாக்கா? அமைச்சர் விசயத்தில் அவர் சொன்னது பலித்தது!’’

நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், 20 சுற்று முடிவில் திமுக வேட்பாளர் ஐ ட்ரீம்ஸ் மூர்த்தி 63,811 வாக்குகளை பெற்றார். அமைச்சர் டி.ஜெயக்குமார் 36,224 வாக்குகளை மட்டுமே பெற்றார். 27587 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயக்குமார் ராயபுரத்தில் தோல்வியுற்றார்.

இதனால், நாஞ்சில் சம்பத்துக்கு கருநாக்கு போலிருக்கிறது. அதனால்தான் அவர் சொன்னது பலித்தது என்று பலரும் சொல்லி வருகிறார்கள்.