பட்டாசு வெடித்து கொண்டாட்டம்; அறிவாலயத்தில் திரண்ட திமுகவினர்

 

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்; அறிவாலயத்தில் திரண்ட திமுகவினர்

வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி பெரும்பான்மையை வகித்து வருகிறது. இதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி திமுக ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து திமுகவினர் சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திரண்டனர். பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர். இனிப்புகளை வழங்கியும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்; அறிவாலயத்தில் திரண்ட திமுகவினர்

கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதால் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்திருந்தது தேர்தல் ஆணையம். நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி தான் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை வெளியிட்டிருந்தது. பட்டாசு வெடிக்க கூடாது, ஊர்வலமாக செல்லக்கூடாது , இனிப்பு வழங்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் விதித்த அத்தனை தடைகளையும் மீறி திமுகவினர் அண்ணா அறிவாலயத்தில் இன்று வெற்றி கொண்டாட்டத்தினை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்; அறிவாலயத்தில் திரண்ட திமுகவினர்

திமுக தலைவரும் கூட, வீட்டுக்குள் இருந்தே வாக்கு எண்ணிக்கையை கவனியுங்கள். வெற்றி கொண்டாட்டத்தை தவிர்த்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார். ஆனாலும், 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும் சூழல் வருவதால் இந்த மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அண்ணா அறிவாலயத்துக்கு திரண்டு வந்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர். ’’ஸ்டாலின்தான் வாராரு…விடியல் தரப்போறாரு..’’என்று பாடி, வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.